Monday, December 19, 2005

TVR - 2

தாத்தா
பொடி பிரியர் !
ஒரு கை Syringe ஊசிக்கு !!
மற்றொன்று பொடி
உறிஞ்சும் நாசிக்கு !!

நொடியில் செய்திகளை அறியும்
ஆர்வமுள்ள வெறியர் !

செய்திகள் பார்க்கும் போது பேசினால்
TVஐ சாத்துவார் !!

முடியாவிட்டால்
அறை விட்டு நம்மை சாத்துவார் !!
அறை விட்டு அகல்வார் !!

அவரோடு நான்
அதிகம் வார்த்தை வார்த்ததில்லை !!
ஆனால் கேட்டிருக்கிறேன்
அவர் கொடுத்த வாக்கு என்றும்
தோற்றதில்லை !!

சாரதா சமேத
சந்திர மெளலீஸ்வரனாய்
சனம்
தினம் கொண்டாடிய
என் தாத்தாவின்
தாரம் சாரதா !!

அவர் ஒரு அவதாரம்!
அவர்க்கோ அவள் தான் ஆதாரம் !!
மூலாதாரம் !!
ஜீவாதாரம் !!

அவர் தான்
அவளின் அலங்காரம் !!
அவளின்றி அவர்க்கு
இறங்காது ஆகாரம் !!

பாரமாக யார்க்கும் இல்லாமல்
சாரமாக வாழ்ந்தவர்கள் !!

பாட்டி இன்று
அம்பியகத்தில் !!
தாத்தா அனைவர்
அகத்தில் !!

-- தொடரும்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home