Thursday, December 22, 2005

TVR - 4

வெற்றிவேலை தொழும்
திருநீற்று நெற்றி !!
தினமும் அவர்க்கு தருகிறது
வெற்றி மேல் வெற்றி !!

மயிலேறுவானை தரிசனம் முடித்து
ரயிலேறுவார்
சிருங்கேரிக்கு !!

ஆச்சார்யாள்
திருப்பாதம் தொழுவார்
கண்ணில் ஒற்றி !!

வாழ்ந்து வருகிறார்
அவர் சொல் பின்பற்றி !

அகந்தை அவம் அகற்றி !!
அன்பு சிவம் புகற்றி !!

காது கை பொத்தி
அபிவாதனம் வாங்காத அச்
சாது கை தூக்கி
பாதுகை தருவார் !

மாமா அவரை
மனதார தொழுவார் !!
மனதுள் அழுவார் !

-- தொடரும்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home