Wednesday, December 07, 2005

பாட்டி எனும் பரமாத்மா - 2


2005_11_06_jpg0001
Originally uploaded by sowgan6163.


யாக்கையில் தான் மூப்பு !! வேலை
பார்க்கையில் உண்டு
ஊரின் கை கூப்பு !!

பட படப்பு இல்லா
பர பரப்பு !!
சுறுசுறுப்பு !!

கீரை ஆய்கிறாள் !!
குறுக்கெழுத்தை ஆராய்கிறாள் !!

தினம் மலரும்
தின மலரில் செய்தி அறிகிறாள் !!
முதுகுத் தண்டு நோக
வாழைத் தண்டையும்
கீரைத் தண்டையும் அரிகிறாள் !!

இதழோரம் என்றும் நாராயணம்!!
பூ இதழ் கொண்டு
சுந்தர காண்டம் பாராயணம் !!

தீபாவளியையும் மலரையும் தொலைத்தவள் !!
தீபாவளி மலரை தொலைத்தால்
தொலைத்து விடுவாள் !!
துளைத்து விடுவாள் !!

இவள்
தேகம் மறந்து எழுதும்
ஸ்ரீ ராம ஜெயம் பார்த்துதான்
சீதைக்கே
ஸ்ரீ ராமனின் ஜெயம்
சந்தேகமற புரிகின்றது !!

அகவை 91றினால் தோலில் சுருக்கம் !!!
அவை அனைத்தையும் எழுத
ஆகும் பல சருக்கம் !!

-- தொடரும்