Thursday, October 25, 2007

சரஸ்வதி சதகம் - 00

காவிய நாயகி

அவள்..
கல்வியின் அச்சு !
கல்லாமையின் நச்சு !!

இயல் இசை நாடகம்
இன்ன பிற கலைகள்
இவளிடத்தில்
பிறக்கின்றது !
இருந்தும்
நானிலம் இவளை
நவராத்திரி அன்றி
பிற நாளில்
மறக்கின்றது !!

மெய்யுள்
அவளருளால் வரும்
செய்யுள் !!

அவள் இல்லையேல்
எழுத வராது
எழுத்து கைக்கும் !
எழுத்து கைக்கும் !!

கம்பனோ கபிலனோ
வாணி சொல்
வைத்தால்
கவி வரும் !
இல்லையேல்
கவி வரும் !!

நாவில் சொல் வைப்பவளை
பாவில் சொல்லியிருக்கிறேன்

கூற்றுக்குள் அடங்காதவளை
நூற்றுக்குள் அடக்க
விழைந்திருக்கிறேன் !
இது வரை போகாத
இலக்கணப் பாதையில்
நுழைந்திருக்கிறேன் !!

அன்னையே...
அவ்வப்போது
துவளும் என் நா !!
தூக்கி விட வா !!

1 Comments:

At 10/27/2007 5:48 AM , Blogger Unknown said...

I really liked ur post, thanks for sharing. Keep writing. I discovered a good site for bloggers check out this www.blogadda.com, you can submit your blog there, you can get more auidence.

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home