Wednesday, October 17, 2007

சரஸ்வதி சதகம் - 00

பிள்ளையார் சுழி

அவன்...
அகவல் நாயகன் !
ஒரு பெரும் போரை
எழுதியதால்
உலகின் முதல்
தகவல் நாயகன் !!

ஆதி நாளில்
அவன் தான்
பாரதம் எழுத
தந்தம் ஒடித்தான் !
சந்தம் வடித்தான் !!

கேட்பான் ஒரு
மோதகம் !
கொடுத்தால் வருவதில்லை
பாதகம் !!

தமிழுக்கு தன்னை
தந்தவன் !
தமிழைத் "தூக்க"
முன் வந்தவன் !!

அவன்
அவ்வை வேண்டியவன் !
எனக்கு வேண்டியவன் !!
சதகம் எழுத எனைத்
தூண்டியவன் !!

சென்றிருந்தேன் ஒரு
பூசைக்கு !
அன்று தொடங்கியது
எழுத்து வேலை என்
மேசைக்கு !!

-- தொடரும்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home