Wednesday, January 17, 2007

விழுந்தான் வில்லன் - 02

தன் பெண்
வளர வேண்டும்
முத்து அளைந்து..
பணிப்பெண்
தளர வேண்டும்
முதுகு வளைந்து..

தன் பையனை
கரத்தால் அள்ளி
கன்னம் கிள்ளி

செல்லுக பள்ளி
வெல்லுக துள்ளி
என சொல்லுவான் !!

வேலைக்காரப் பையனை
"பொறுக்குக சுள்ளி !"
அறிவுக்கும் உனக்கும்
சற்று தள்ளி என
கொல்லுவான் !!

பல நாள்
பல இந்தியன்
இன்னணம்
இருந்தான் !
என்ன சொல்லியும்
திருந்தான் !!

பல சிறார்களை
இது கொன்றது !!
எஞ்சியோர் எலும்பை
நாளும் தின்றது !!
பல நாள்
இன்னணம் சென்றது !!

கொடுமையானது
மிடிமை !!
அதனினும் கொடுமை
அடிமை !!

வசதியற்று வாழலாம் !!
வாழ்வற்று வாழ்வதா?
அன்றாடம் துயரில்
ஆழ்வதா?

வராதா விடிவு !!
என்ன தான் இதற்கு
முடிவு?

என நாளும்
அவர்கள் கண்
கலங்கியது !!
இன்று அவர் வாழ்வு
துலங்கியது !!

-- தொடரும்

2 Comments:

At 1/24/2007 10:36 AM , Blogger Narayanan Venkitu said...

Very Nice and touching indeed. Way to go :)

 
At 3/17/2007 7:55 AM , Blogger Unknown said...

நல்லா இருக்குங்க...

வாலியின் தாக்கம் அதிகமோ...

கிட்டத்தட்ட அவர் அவிதையை படிச்சமாதிரியே இருக்கு....

ஆனந்த சித்தன்

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home