Monday, January 15, 2007

விழுந்தான் வில்லன் - 01

"ஓதுவது ஒழியேல்"
"எண்ணும் எழுத்தும் கண்"
அன்றே சொன்னது
தமிழ் மண் !!

எண்ணற்ற
எண் அற்ற மனிதருக்கு
எஞ்சின வெறும் புண் !!
எனவே இன்றியமையாதது
எண் என
எண் !

வல்லூறு அழிக்க
வளமை கொழிக்க

சூடியும் குறளும்
சூடிய கருத்து
அவை !!
இன்றைய தேதியில்
இன்றியமையாதவை !!

இந்தியனுக்கு
"பட்டால் தான் தெரியும்"
என ஒரு பழக்கம் !!
பட்டுப் பட்டு தெரிவதே
அவன் வழக்கம் !!

தொன் மறைகள்
தொகுத்தளித்த
தகத்தகாயமான கோட்பாடுகளை
இந்தியன் வந்தியன் !
அதனாலேயே அவன்
பல காலம்
பிந்தியன் !!

-- தொடரும்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home