Monday, December 05, 2005

பாட்டி எனும் பரமாத்மா - 1

ganesh
களக்காட்டில் பிறந்தவள் !
ஆற்காட்டில் புகுந்தவள் !
களம் காடு பார்த்தவள் !!

Mansionல் வாழ்ந்ததில்லை !!
இருந்தாலும் உறவுகள் இவளை
Mention பண்ண தவறுவதில்லை !!
இன்று Pensionல் Tension இல்லாமல்
வாழ்கிறாள் !!

பண்டிகை எல்லாம்
அவள் கை பக்குவம் உண்டு!!
உண்டு உண்டு அவளை
மெச்சியது உண்டு !!
உண்டு உண்டு அவளை
மெச்சியது உண்டு !!

காரம் இருக்கும்!
அகங்காரம் இருக்காது !!

முறுக்குண்டு !
முறுக்கில்லை !!

நெடுஞ் சாண் கிடையாய் விழின்
கூடவே தருவாள்
ஒத்தை ரூபாய் நோட்டும்
ஒரு வாய் ஆசீர்வாதமும் !!

கண் தெரிய
ரவியை பார்த்தாள் !
கண் தெரிய
ரவியை பார்க்கிறாள் !!

ஒரு ரவி
கண் இருள் போக்கிய
கண்ணியன்!
புண்ணியன் !!
வைத்தியன் !!

மற்றொருவன்
மண் இருள் மூடாதிருக்க உதவும்
பகலவன் !
பகல் அவன் !!
கதிரவன் !
கதிர் அவன் !!

-- தொடரும்