Wednesday, July 06, 2011

மயிலை…..- 01



அவன் சைவத்தின் ஆதி !!
அவள் அவனில் பாதி !!

கண்ணுதற் கடவுளும்
கருத்திற்கினியவளும்
வாழுமிடம் கயிலை !!
கபாலியாய் கற்பகமாய்
சூழுமிடம் மயிலை !!

”என்னைக் காத்தருள்”
என அவளைப் போற்றினால்
எந்நாளும் பாப நாசம் !!

அப் பாடலன்றி
அனேக பாடலில்
அளவின்றி
அதைச் செய்தார்
பாபநாசம் !!

சிவனே என்று
சிவனே! என்று
சிவனே போற்றினார்
சிவத்தை !!

அகற்றினார் அனேகர்
அவத்தை !!

சிவனை ”நம்பிக்
கெட்டவர் எவர்” ?
அதனையும் பாடினார்
அவர் !!

- தொடரும்

Labels: , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home